ஆப்கானிலிருந்து துருப்புகளை முழுமையாக வெளியேற்றும் திட்டமில்லை!!

தலிபான்களுடனான அமெரிக்க சமாதான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ள போதிலும், ஆப்கானிலிருந்து தமது துருப்புகளை முழுமையாக வெளியேற்றும் திட்டமில்லை என பென்டகன் அறிவித்துள்ளது.

அமெரிக்க பதில் பாதுகாப்பு செயலாளர் பட்ரிக் ஷனஹன் நேற்று (திங்கட்கிழமை) இதனை அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 17 ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், இதனை முடிவுக்கு கொண்டுவரும் சமாதான உடன்படிக்கைக்கான வரைவை அமெரிக்க தரப்பும், தலிபான்களும் ஏற்றுக் கொண்டுள்ளன.

அமெரிக்காவிற்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுக்கும் இடையே கடந்த 6 நாட்களாக நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளின் விளைவாக இந்த ஒப்புதல் எட்டப்பட்டுள்ளது.

இதுவரை காலமும், ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் மறுத்து வந்த நிலையில், இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் இதுவரை அமெரிக்கா தலைமையிலான படையினர் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும், தலிபான்களின் வலிமை குன்றாமல் மோதல் நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.