வண்ணாங்குளம் பகுதியில் நிவாரண உதவித் திட்டம்!

தெரிவு செய்யப்பட்ட 50 மாவீரர்களின் பெற்றோர்களுக்கு உலருணவுப் பொதிகள் இன்று வழங்கப்பட்டன.


முல்லைத்தீவு – வண்ணாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் வைத்து இவை வழங்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி – சிறீற்கந்தராசாவின் நிதி ஒதுக்கீட்டில், மக்கள் நலன் காப்பகத்தினூடாக இவை வழங்கப்பட்டன.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி – சிறீற்கந்தராசா, வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா – ரவிகரன், பங்குத் தந்தை அன்ரன் சோர்ச், கரைதுறைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர்களான சி.லோகேசுவரன், ம.தொம்மைப்பிள்ளை, தி.இரவீந்திரன் மற்றும் மக்கள் நலன் காப்பக நிர்வாகிகள், வண்ணாங்குளம் கிராம உத்தியோகத்தர் வே.அருணோதயம், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மா.செயசுதர்சன் ஆகியோரோடு மாவீரர்களின் பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.