யாழில் 74 கிலோ கஞ்சா மீட்ப்பு!
யாழ்ப்பாணத்தில் வாழைத் தோட்டம் ஒன்றில் 74 கிலோ கஞ்சா நேற்று மீட்கப்பட்டுள் ளது. அந்தத் தோட்டத்தின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் குடாநாட்டில் அண்மைய நாள்களில் பெருமளவு போதைப்பொருள்கள் கைப்பற்றப்படுகின்றன. போதை ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படும் நிலையில் போதைப் பொருள்கள் தினமும் கண்டெடுக்கப்படுகின்றன.
பருத்தித்துறைக் கடற்படையினருக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதையடுத்து கடற்படையினரும், பருத்தித்துறைப் பொலிஸாரும் இணைந்து இரகசிய நடவடிக்கையை மேற்கொண்டனர்.
காங்கேசன்துறைப் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உடுகம சூரியவின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று 11 மணியளவில் பருத்தித்துறை, இன்பசிட்டியில் வாழைத் தோட்டம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டது. அந்தத் தோட்டத்தில் உள்ள கட்டடம் ஒன்றின் கூரையின் மேல் பரப்பப்பட்டுக் காய வைக்கப்பட்ட நிலையில் 74 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தத் தோட்டத்தின் உரிமையாளர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, பருத்தித்துறை, வல்வெட்டித்துறையில் நேற்றுமுன்தினம் 110 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது. வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டது.
இந்த வாரம் ஏழாலைப் பகுதியில் 7 ஆயிரத்து 500 லீற்றர் தூய மதுசாரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
யாழ்ப்பாணம் குடாநாட்டில் அண்மைய நாள்களில் பெருமளவு போதைப்பொருள்கள் கைப்பற்றப்படுகின்றன. போதை ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படும் நிலையில் போதைப் பொருள்கள் தினமும் கண்டெடுக்கப்படுகின்றன.
பருத்தித்துறைக் கடற்படையினருக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதையடுத்து கடற்படையினரும், பருத்தித்துறைப் பொலிஸாரும் இணைந்து இரகசிய நடவடிக்கையை மேற்கொண்டனர்.
காங்கேசன்துறைப் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உடுகம சூரியவின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று 11 மணியளவில் பருத்தித்துறை, இன்பசிட்டியில் வாழைத் தோட்டம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டது. அந்தத் தோட்டத்தில் உள்ள கட்டடம் ஒன்றின் கூரையின் மேல் பரப்பப்பட்டுக் காய வைக்கப்பட்ட நிலையில் 74 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தத் தோட்டத்தின் உரிமையாளர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, பருத்தித்துறை, வல்வெட்டித்துறையில் நேற்றுமுன்தினம் 110 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது. வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டது.
இந்த வாரம் ஏழாலைப் பகுதியில் 7 ஆயிரத்து 500 லீற்றர் தூய மதுசாரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை