விடுதலை செய்யப்பட்டார் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ!

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அவருக்கு எதிரான வழக்கொன்றிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தனது சொத்து விபரத்தினை சமர்ப்பிக்க தவறியதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலிருந்தே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(செவ்வாய்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சொத்து விபரத்தினை சமர்ப்பிக்க தவறியதாக தெரிவித்து குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.