தேர்தலை நடத்தாவிடில்- பதவி துறப்பேன்- மகிந்த!!
அதாவது எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படவேண்டும். இல்லாவிடின் தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் பதவியிலிருந்து விலகுவேன். இவ்வாறு எச்சரித்துள்ளார் மகிந்த தேசப்பிரிய.
தேர்தல்கள் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரச தலைவர் தேர்தலை முற்கூட்டி நடத்தலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எவ்வாறாயினும் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, நவம்பர் 9ஆம் திகதிக்கும் டிசெம்பர் 9ஆம் திகதிக்கும் இடையில் அரச தலைவர் தேர்தல் நடத்தப்பட்டாகவேண்டும்.
இந்தத் தேர்தலை உரிய காலப் பகுதிக்குள் நடத்த முடியாவிட்டால் நான் பதவி துறப்பேன். அதேபோன்று மாகாணசபைகளுக்கான தேர்தலை நவம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியாது போகுமாக இருந்தால் நான் தவிசாளர் பதவியிலிருந்து விலகுவேன்.
மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் நாட்டின் குடிமகன் என்ற அடிப்படையில் வேதனைப்படுகின்றேன். தேர்தல் தொடர்பில் பல பேச்சுக்கள் நடந்துள்ளன. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடனும் தனித்துப் பேச்சு நடத்தியுள்ளேன்.
எல்லாக் கட்சிகளினதும் தலைவர்கள் இந்தத் தேர்தலை நடத்தவேண்டும் என்று கூறுகின்றார்கள். சில கட்சிகள் தங்களின் நிகழ்சி நிரலுக்கு அமைவாக தேர்தலை நடத்தவேண்டும் என்று கூறுகின்றார்கள்.
கட்சிகளின் நிகழ்சி நிரலுக்கு அமைவாக தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாரில்லை – என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை