ஏமன் மோட்டர்சைக்கிள் வெடிகுண்டு தாக்குதல்; 6 பேர் பலி

ஏமன் நாட்டின் செங்கடலை ஒட்டியுள்ள மோக்கா நகரில், ஒரு மோட்டார்சைக்கிளில் வெடிகுண்டுகளை நிரப்பி நடத்தப்பட்ட தாக்குதலில், பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர்; 26 பேர் காயமடைந்தனர்.


ஏமன் நாட்டின், மோக்கா நகரில், தீவிரவாதிகள் ஒரு மோட்டார்சைக்கிள் முழுக்க வெடிகுண்டுகளை நிரப்பி, அதை பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தனர். ஒரு உணவகத்தின் அருகே நின்று கொண்டிருந்த அந்த மோட்டார்சைக்கிள், நேற்று மாலை பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அந்த பகுதியில் நடமாடிக்கொண்டிருந்த பொதுமக்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 26 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் அரசு படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதா அல்லது, அதிகாரிகளை குறிவைத்து நடத்தப்பட்டதா என ஏமன் ராணுவம் விசாரித்து வருகிறது. காயம் அடைந்தவர்கள் பலர் மோசமான நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இன்னும் எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

2014ம் ஆண்டு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டின் தலைநகர் சனா உட்பட வடக்கு பகுதிகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.