இராணுவ சுற்றிவளைப்பினால் புளியங்குளத்தில் பதற்றம்!

வவுனியா, புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற ஒருவரை சோதனையிட முற்பட்ட போது, அவர் தப்பியோடியமையால் குறித்த பகுதியினை இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


சந்தேகநபர் விட்டுச்சென்ற பையிலிருந்து ஒரு கைத்துப்பாக்கி, நான்கு கைக்குண்டுகள், கைத்துப்பாக்கிக்கான ரவைகள் உட்பட மேலும் சில பொருட்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவரின் நடமாட்டம்  காணப்படுவதாக புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் பொலிஸார் பதுங்கியிருந்துள்ளனர்.

இதன்போது, நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணியளவில் அவ்விடத்திற்கு வந்த குறித்த சந்தேகநபரை மறித்து சோதனையிட முற்பட்டபோது, தான் கொண்டுவந்த பையை அவ்விடத்தில் எறிந்துவிட்டு காட்டுக்குள் தப்பிச்சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு சந்தேகநபரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதூர் முதல் கனகராயன்குளம் வரையிலான காட்டுப்பகுதி மற்றும் கிராமங்களை உள்ளடக்கி இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் மோப்ப நாய்களின் உதவியையும் பெற்றுள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் முதற்தடவையாக அப்பகுதியில் இராணுவத்தினர் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளமை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்களின் இயல்புநிலையும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.