30 வருட போருக்கு -இரு சாராருக்கும் மொழி தெரியாததே காரணம்
30 வருட போருக்கு இரு சாராருக்கும் மொழி தெரியாததே முக்கிய காரணம். தென்பகுதில் உள்ள சிங்கள மக்களுக்கு தமிழ்மொழி தெரியாது.தமிழ் பேசும் மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு சிங்கள மொழி தெரியாது.இதனாலேயே பல்வேறு பிரச்சினைகள் உருவாகவும் தீர்க்க முடியாத நிலையும் ஏற்பட்டது.
இந்த நிலையில் மாகாணக் கல்வி அமைச்சினால் தமிழ் பேசும் அரச அலுவலர்களுக்கு ஆரம்பநிலை சிங்கள அறிவினை ஊட்டுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சி பாராட்டத்தக்கது இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் மும்மொழக் கற்கை நிலையத்தின ரால் அரச அலுவலகங்களில் கடமையாற்றும் அலுவலர்களுக்கு நடத்திய 50 மணிநேர சிங்களப்பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்டவர்களுக் குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
‘‘மொழிக்கல்வி பாடசாலைகளில் ஊட்டுவது சிறந்ததென கருதிய போதும் இங்குள்ள பாடசாலைகளில் சிங்கள மொழியிலான ஆசிரியர்கள் இல்லை. இதே போன்று சிங்கள மொழிப் பாடசாலைகளில் தமிழ் மொழி போதிக்கும் ஆசிரியா்கள் இல்லை.இதனைக் கருத்திற் கொண்டு முதற்கட்டமாக சிங்கள மொழி தெரிந்த வளவாளர்களினால் ஆரம்பநிலை அரச அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அவ்வாறு தென்பகுதியில் உள்ள அரச அலுவலர்களுக்குத் தமிழ் மொழிப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.நான் தென்பகுதியைச் சேர்ந்தவன் என்பதால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட தும் தமிழ்மொழியை பயின்றதுடன் இங்குள்ள அலுவலர்கள் பொது மக்கள் ஆகியோருடன் தமிழில் கதைக்கிறேன்.பேசும் போது சில தவறுகள் காணப்படும் ஆனால் வெட்கப்படாமல் கதைப்பதால் சில தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டு இன்று உங்கள் முன்னால் தமிழில் உரையாற்றுகிறேன்.
இந்தப் பயிற்சியினை பெற்றவர் தொடர்ந்து ஏனையோருடன் கதையுங்கள் கதைக்காமல் விட்டால் பரீட்சைகளில் சித்தியடைந்தாலும் பேசத் தெரியாவிடின் எவ்வித பயனுமில்லை.உலகில் உள்ள நாடுகளில் மதம், மொழி,சாதியென பல்வேறு வகையில் இருந்தாலும் அங்குள்ள மக்கள் தமது தாய் மொழியுடன் அடுத்த மொழியையும் தெரிந்திருப்பது பிரச்சினைகள் உருவாகாமல் தம்மை பாதுகாக்க உதவும்.
அடுத்த மொழியை தெளிவறக் கற்பவன் அந்த மொழி பேசும் அனைவருக்கும் சமம் என்னும் வாக்கியத்துக்கு அமைய இலங்கை குடிமக்க ளாகிய நாம் அரச கரும மொழிகளில் நன்கு பரீட்சையமானவர்களா கத் திகழ வேண்டும்’’– என்றார்.
யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயம்,புத்தகலட்டி பாடசாலை ஆகிய எட்டு நிலையங்களில் நடத்தப்பட்ட பயிற்சி நெறிகளில் பங்குபற்றிய 740 பேருக்கே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
இந்த நிலையில் மாகாணக் கல்வி அமைச்சினால் தமிழ் பேசும் அரச அலுவலர்களுக்கு ஆரம்பநிலை சிங்கள அறிவினை ஊட்டுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சி பாராட்டத்தக்கது இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் மும்மொழக் கற்கை நிலையத்தின ரால் அரச அலுவலகங்களில் கடமையாற்றும் அலுவலர்களுக்கு நடத்திய 50 மணிநேர சிங்களப்பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்டவர்களுக் குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
‘‘மொழிக்கல்வி பாடசாலைகளில் ஊட்டுவது சிறந்ததென கருதிய போதும் இங்குள்ள பாடசாலைகளில் சிங்கள மொழியிலான ஆசிரியர்கள் இல்லை. இதே போன்று சிங்கள மொழிப் பாடசாலைகளில் தமிழ் மொழி போதிக்கும் ஆசிரியா்கள் இல்லை.இதனைக் கருத்திற் கொண்டு முதற்கட்டமாக சிங்கள மொழி தெரிந்த வளவாளர்களினால் ஆரம்பநிலை அரச அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அவ்வாறு தென்பகுதியில் உள்ள அரச அலுவலர்களுக்குத் தமிழ் மொழிப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.நான் தென்பகுதியைச் சேர்ந்தவன் என்பதால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட தும் தமிழ்மொழியை பயின்றதுடன் இங்குள்ள அலுவலர்கள் பொது மக்கள் ஆகியோருடன் தமிழில் கதைக்கிறேன்.பேசும் போது சில தவறுகள் காணப்படும் ஆனால் வெட்கப்படாமல் கதைப்பதால் சில தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டு இன்று உங்கள் முன்னால் தமிழில் உரையாற்றுகிறேன்.
இந்தப் பயிற்சியினை பெற்றவர் தொடர்ந்து ஏனையோருடன் கதையுங்கள் கதைக்காமல் விட்டால் பரீட்சைகளில் சித்தியடைந்தாலும் பேசத் தெரியாவிடின் எவ்வித பயனுமில்லை.உலகில் உள்ள நாடுகளில் மதம், மொழி,சாதியென பல்வேறு வகையில் இருந்தாலும் அங்குள்ள மக்கள் தமது தாய் மொழியுடன் அடுத்த மொழியையும் தெரிந்திருப்பது பிரச்சினைகள் உருவாகாமல் தம்மை பாதுகாக்க உதவும்.
அடுத்த மொழியை தெளிவறக் கற்பவன் அந்த மொழி பேசும் அனைவருக்கும் சமம் என்னும் வாக்கியத்துக்கு அமைய இலங்கை குடிமக்க ளாகிய நாம் அரச கரும மொழிகளில் நன்கு பரீட்சையமானவர்களா கத் திகழ வேண்டும்’’– என்றார்.
யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயம்,புத்தகலட்டி பாடசாலை ஆகிய எட்டு நிலையங்களில் நடத்தப்பட்ட பயிற்சி நெறிகளில் பங்குபற்றிய 740 பேருக்கே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
கருத்துகள் இல்லை