இராணுவம் வெளியேற வேண்டும்- மாற்றுக் கருத்து எதுவும் இல்லை

வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள மக்களின் காணிகள், விவசாய நிலங்களில் ,அரச காணிகளில் , ஆலயங்கள், பாடசாலை என மக்களுக்கு உரிய பிரதேசங்களில் உள்ள அனைத்து இராணுவத்தினரும் வெளியேர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


இவ்வாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலனாதன் தெரிவித்துள்ளார்.

படிப்படியாக சிறு அளவு முன்னேற்றம் இருந்தாலும் மக்கள் எதிர் பார்த்த அளவு இராணுவம் மக்களின் காணிகளில் இருந்து செல்லவில்லை.

ஏற்கனவே 1980 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்த இராணுவ முகாம்களை தவிர அதற்குப் பிற்பாடு போர் காரணமாக உருவாக்கப்பட்ட இராணுவ முகாம்கள் மற்றும் இராணுவத்தினர் விலகி மக்களின் ஜனநாயக வாழ்க்கைக்கு இடையூறு இல்லாத வகையில் செயற்பட வேண்டும்.

இது தொடர்பாக ஜனாதிபதியிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.