தை பிறந்தால் வழி பிறக்கும்இந்த தாயின் துயரம் நீங்குமா?

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நீண்டகால நம்பிக்கை.


தமிழர்களுக்கு வழி பிறக்குதோ இல்லையே இந்த தாயின் துயரத்திற்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்பதே உலக தமிழர்களின் விருப்பம்.

ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 27 வருடங்களாக ஓய்வின்றி தன் மகன் விடுதலைக்காக இந்த தாய் நடந்து திரிகிறார்.

இந்த 27 வருட அலைச்சலில் அவர் ஒருபொழுதுகூட விரக்தி அடைந்ததில்லை. மகனின் போராட்ட உணர்வை குறைகூறியதில்லை.

அவரது ஆசை எல்லாம் தன் வாழ்வின் இந்த இறுதி வேளையிலாவது மகன் பேரறிவாளன் தன் அருகில் இருக்க வேண்டும் என்பதே.

அவர் பெயர் மட்டுமல்ல அவரது வாழ்வும் அற்புதம் தான்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.