சபாநாயகர் தலைமையில் கிளிநொச்சியில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்ன??

இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அரச ஊழியர்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் இக் கொடுப்பனவை வழங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் விடயத்திலும் பயனாளிகளை தெரிவு செய்வதிலும் குழப்பங்கள், மற்றும் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டிருந்த நிலையில், அதற்கு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் வகையில் இன்றைய தினம் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 22, 563 குடும்பங்களுக்கும் இக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது.இவ் அறிவிப்பானது பாதிக்கப்பட்ட சகல மக்களிற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.