ரிவர் வொல்லி வீதி மூடப்படும் – சாரதிகளுக்கு அறிவித்தல்

க்ரூட் சாலட் பாலத்தின் மூன்று வருட சாலை புதுப்பித்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக அதன் கீழ் உள்ள ரிவர் வொல்லி வீதி
(வியாழக்கிழமை) முதல் மூடப்படுவதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலம் கீழ் உள்ள பகிர்வு-பயன்பாட்டு பாதை மற்றும் வடமேற்கு பகுதியில் இருந்து பாலத்தை நோக்கி செல்லும் பாதைகளே மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பலத்தை இடித்து அதனை அகலமாக்கும் பணிகள் இடம்பெறவுள்ளமையினால் இந்த வீதிகளை மூடுவதாக தெரிவித்துள்ளனர்.
அதற்கான வேலைகள் கடந்த ஆண்டு இறுதியில் (டிசம்பர்) ஆரம்பமாகி இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் குறித்த பாதையை பயன்படுத்திய பயணிகள் – வாகன சாரதிகள், சைக்கிளில் செல்பவர்கள் மற்றும் பாதசாரிகள் மாற்று வழிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு போக்குவரத்து கட்டுப்பாட்டு சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.