யாழில் வீதியில் சென்ற பெண்களிடம் சங்கிலிகள் அபகரிப்பு

யாழ்ப்பாணம் மாநகரில் இரு வேறு இடங்களில் இன்று சனிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் வீதியால் சென்ற பெண்களின் தங்க சங்கிலிகளை அபகரித்துச் சென்றுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நல்லூர் மற்றும் சுண்டுக்குளி பகுதிகளில் இன்று மாலை இந்த வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் இரண்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஒரே வகையான மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் என்று முறைப்பாட்டாளர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள யாழ்ப்பாணம் பொலிஸார், சம்பவ இடங்களில் உள்ள கண்காணிப்பு கமராக்களின் பதிவுகளை பெற்று விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இரண்டு கொள்ளைச் சம்பவங்களில் பெண்களிடமிருந்து சுமார் 5 பவுண் தங்கச் சங்கலி அபகரிக்கப்பட்டுள்ளன என்று முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.