மாடொன்றினை திருடிய மூவருக்கு விளக்கமறியல்!

திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் வீட்டில் நின்ற மாடொன்றினை திருடி இறைச்சிக்காக அறுத்த மூவரை இம்மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் சானிக்கா பெரேரா இன்று உத்தரவிட்டார்.


கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 38, 24 மற்றும் 26 வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கந்தளாய் பேராறு பிரதேசத்தில் வீட்டின் முற்றத்தில் கட்டியிருந்த மாட்டினை திருடிக் கொண்டு சென்று இறைச்சிக்காக வெட்டியுள்ளார்கள்.

மாட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சந்தேக நபர்களுக்கெதிராக ஏற்கனவே மாடு திருடிய வழக்கொன்றும் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.