கேரளாவில் தொடர்ந்தும் வன்முறை!

சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் வன்முறை சம்பவங்கள் நீடிப்பதால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகின்றது.


மாவட்டம் முழுவதும் தொடர் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் தலசேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு வரை பொலிஸார் ‘144’ தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்நிலையில், அரசியல் தலைவர்களின் வீடு மற்றும் கட்சி அலுவலகங்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

போராட்டக்காரர்களால் குறித்த பகுதிகளில் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கல்வீச்சு நடத்தியுள்ளனர். இதன்காரணமாக அப்பகுதிகளில் 2 பெண்கள் காயமடைந்துள்ளதுடன் பொருட்கள் மற்றும் வாகணங்களும் சேதமடைந்துள்ளன.

இதேபோன்று, மாநிலத்தின் பல பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், அதனால் அந்த பகுதிகளில் பதற்றம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கேரளாவில் நாத்திகத்தை பரப்ப இடதுசாரி அரசு திட்டமிட்டு செயற்படுவதாக நாயர் சேவை சமூகம் (என்.எஸ்.எஸ்.) குற்றஞ்சுமத்தியுள்ளது.

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பலத்த எதிர்ப்பு மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 50 வயதுக்கு உட்பட்ட இரு பெண்கள் கடந்த 2ஆம் திகதி தரிசனம் செய்ததையடுத்து, மாநிலம் முழுவதும் போராட்டமும் வன்முறை சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.