பிரித்தானியர்கள் ஜேர்மனியில் தங்குவதற்கு அனுமதி!


பிரித்தானியா ஒப்பந்தம் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினாலும் ஜேர்மனியில் தங்கியுள்ள பிரித்தானியர்கள் தொடர்ந்தும் தமது நாட்டில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்களென அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.


பிரெக்ஸிற்றின் பின்னரும் மூன்று மாத காலத்திற்கு தங்கள் வதிவிட உரிமையை பிரித்தானியர்கள் தக்கவைத்துக்கொள்ள முடியுமெனவும் அதன் பின்னர் வதிவிட உரிமையை நீடிப்பதற்கு விண்ணப்பிக்க முடியுமெனவும் ஜேர்மனியின் உள்துறை அமைச்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் பிரித்தானியர்கள் ஜேர்மனியில் வாழ்வதற்கு விண்ணப்பிப்பதில் எவ்வித தடைகளுமிருக்காது எனவும் ஜேர்மனியின் உள்துறை அமைச்சு உறுதியளித்துள்ளது.

உடன்பாடற்ற பிரெக்ஸிற்றின் போது ஏற்படக்கூடிய வான்வழிப் போக்குவரத்து இணைப்புகளுக்கான இடையூறுகளை கருத்திற்கொண்டு ஜேர்மனி அரசாங்கம் பிரித்தானிய அரசுடன் நெருங்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக ஜேர்மனியின் போக்குவரத்து அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.