நெடுந்தீவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் கைது!

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்கள் படகொன்றில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களின் படகினையும் பறிமுதல் செய்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விசாரணைகளின் பின்னர் வட.மாகாண நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக காங்கேசன்துறை கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.