எம்.ஜி.ஆர் சிலைக்கு தோண்டப்பட்ட குழியினால் வவுனியாவில் பதற்றம்


வவுனியா, தர்மலிங்கம் வீதியிலுள்ள சந்தியில் எம்.ஜி.ஆர்  சிலையை வைப்பதற்கு, நற்பணி மன்றத்தினால் குழியொன்று தோண்டப்பட்டுள்ளது. இதன்போது அவ்விடத்தில் கூடிய சிலர், இந்நடவடிக்கையை கைவிடுமாறு வலியுறுத்தியதால் இரு தரப்பினருக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.



 இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இச்சம்பவம் தொடர்பில் தனிநபரொருவர், நகர சபையினருக்கு எழுத்துமூலம் முறையிட்டுள்ளார்.

 அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நகரசபையினர் மற்றும் பொலிஸார் குழியினை மூடுமாறு பணித்ததுடன், உரிய அனுமதியினை பெற்று சிலை வைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். பின்னர் தோண்டப்பட்ட குழியினை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.