அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் 59திரைப்படத்தில் நடிக்கின்றார்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் ’59’ திரைப்படத்தில் நடிக்க இந்திய சினிமாவில் முக்கிய நடிகையும், தேசிய விருது வென்றவருமான வித்யாபாலன் ஒப்பந்தமாகி இருக்கின்றார்.


இத்திரைப்படத்தில் 3 கதாநாயகிகளில் ஒரு கதாபாத்திரத்தில் நஸ்ரியா நடிப்பது உறுதியாகி இருக்கின்றது. மற்ற இரு கதாபாத்திரங்களுக்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் கல்யாணி பிரியதர்ஷனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகிருக்கின்றது.

தேசிய விருது வென்ற நடிகை வித்யா பாலனும் இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதை போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார். இத்திரைப்படத்தில் வித்யா பாலனுக்கு முக்கிய வேடம் இருக்குமென்று  எதிர்பார்க்கப்படுகின்றது.

‘விஸ்வாசம்’ திரைப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் 59திரைப்படத்தில் நடிக்கின்றார். போனி கபூர் இத்திரைப்படத்தைத் தயாரிக்கின்றார்.

அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக்தான் இத்திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கின்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.