மன்னாரில் ‘சிவ பூமி மதம் மாற்றிகள் நுழையாதீர்கள்’பாணியில் சுவரொட்டிகள்!

மன்னார் நகரின் மத்திய பகுதிகளில் இனம் தெரியாத சிலரால் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


குறித்த சுவரொட்டிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை வேளையில் இவை ஒட்டப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மன்னார் நகரின் மத்திய பகுதிகள் மற்றும் மன்னார் பொது விளையாட்டரங்கு போன்ற பகுதிகளில் ‘சிவ பூமி மதம் மாற்றிகள் நுழையாதீர்கள்’ எனும் மத ரீதியான அடையாளப்படுத்தப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகள் தொடர்பாகவோ ஒட்டியவர்கள் தொடர்பாகவோ இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என மன்னார் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், மன்னார் மாவட்டம் அனைத்து மதத்தினருக்கும் உரிய பூமி எனவும் எந்த தனி நபர்களும் எங்கள் மத ஒற்றுமையை இவ்வாறான சுவரொட்டிகள் மூலம் சீர்குலைக்க முடியாது என பொது மக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவ்வாறான மதவாதச் செயற்பாடுகளை உடன் நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.