கடற்படையால்பெண்கள் இருவர் கைது!!

சிலாபம் நல்லதரன் கட்டுப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல் ஆமைகளை இறைச்சியாக்கினர் என்ற குற்றச்சாட்டின் படியே அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

25 கிலோக்கிராம் ஆமை இறைச்சி, மற்றும் கடல் ஆமையின் 211 முட்டைகளுடன் பெண்கள் இருவரும் வட மேற்கு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும், கடற்படையினரால் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக  வனவிலங்கு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.