சம்பந்தனுக்கு வீட்டை கொடுக்கிறார் மகிந்த
எதிர்க்கட்சித் தலைவருக்கான உத்தியோகபூர்வ இல்லத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு விட்டுக்கொடுக்க மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டு அரசு ஆட்சியமைத்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராகப் பதவியேற்றார். கடந்த ஒக்ரோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து ஐக்கிய தேசிய முன்னணி அரசு தற்போது ஆட்சிய அமைத்துள்ளது.
சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியாக மாற, மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றார். இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவர் பதவியை இழந்தார்.
எதிர்கட்சித் தலைவராகப் பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவிடம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனால் எதிர்கட்சித் தலைவருக்கான உத்தியோகபூர்வ இல்லம் இன்னமும் அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை.
இந்தநிலையில் அந்த இல்லத்தில் இரா.சம்பந்தன் தொடர்ந்து தங்கியிருக்கட்டும் என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பந்தன் அதில் இருக்கட்டும். அரசியல் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு. அவர் வயது முதிர்ந்தவர். முன்னர் இருந்த வீட்டில் மாடி ஏறச் சிரமப்படுகின்றார் என்றுதான் இந்த வீடு கொடுக்கப்பட்டது. அதில் அவர் இருக்கட்டும் என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார் என்று கூறப்படுகின்றது.
கூட்டு அரசு ஆட்சியமைத்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராகப் பதவியேற்றார். கடந்த ஒக்ரோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து ஐக்கிய தேசிய முன்னணி அரசு தற்போது ஆட்சிய அமைத்துள்ளது.
சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியாக மாற, மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றார். இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவர் பதவியை இழந்தார்.
எதிர்கட்சித் தலைவராகப் பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவிடம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனால் எதிர்கட்சித் தலைவருக்கான உத்தியோகபூர்வ இல்லம் இன்னமும் அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை.
இந்தநிலையில் அந்த இல்லத்தில் இரா.சம்பந்தன் தொடர்ந்து தங்கியிருக்கட்டும் என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பந்தன் அதில் இருக்கட்டும். அரசியல் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு. அவர் வயது முதிர்ந்தவர். முன்னர் இருந்த வீட்டில் மாடி ஏறச் சிரமப்படுகின்றார் என்றுதான் இந்த வீடு கொடுக்கப்பட்டது. அதில் அவர் இருக்கட்டும் என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார் என்று கூறப்படுகின்றது.
கருத்துகள் இல்லை