கைத்தொலைபேசி செயலிகளைப் பயன்படுத்துவதிலும், பதிவிறக்கம் செய்வதிலும் சிங்கப்பூரர்கள் முன்னிலை!

கைத்தொலைபேசி செயலிகளைப் பயன்படுத்துவதிலும், பதிவிறக்கம் செய்வதிலும், சிங்கப்பூர் வாசிகள் முன்னிலையில் இருப்பதாக, அண்மை ஆய்வு ஒன்று காட்டுகிறது.


App Annie ஆய்வு நிறுவனம் அது பற்றிய ஆய்வை நடத்தியது.

சிங்கப்பூரில் இருப்பவர்கள் தங்கள் கைத்தொலைபேசிகளில் சராசரியாக 115 செயலிகளைப் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளதாகவும், அவற்றில் 46ஐ பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நாடுகள் பட்டியலில், சிங்கப்பூரே முன்னிலையில் இருக்கிறது.

சிங்கப்பூர் முதிர்ச்சி அடைந்த சந்தை என்பதை அது காட்டுவதாக, App Annie நிறுவனம் கூறியது.

சிங்கப்பூரர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களுக்கும் செயலிகளைப் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டது.

தொடர்பு வைத்துக்கொள்வது முதல், பொருள்களை வாங்குவது வரை பலவற்றுக்கும் சிங்கப்பூரர்கள் செயலிகளை நாடுவதாக ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.