இராணுவ தளம் குறித்த விடயம் அமெரிக்காவால் நிராகரிப்பு!

இலங்கையில் இராணுவத்தளம் அமைப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாரள் நான்சி வான் ஹோர்ன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இராணுவத்தளம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்காவுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்கவுள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர நேற்று முன்தினம் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாளர் நான்சி வான் ஹோர்ன், “இலங்கையில் இராணுவத்தளத்தை நிறுவுவதற்கு அமெரிக்கா முயற்சித்து வருவதாக வெளியான தவறான செய்திகளை அமெரிக்க தூதரகம் அறிந்திருக்கிறது. இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை.

அமெரிக்க – இலங்கை  இராணுவ ஒத்துழைப்பானது, அனர்த்த தயார் நிலை,  நிவாரணம், கடல் பாதுகாப்பு பயிற்சி, மற்றும் பயிற்சிகளை வலுப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளதே அன்றி, அமெரிக்காவின் தளம் ஒன்றை அமைப்பது, அதன் ஒரு அங்கமாக இருந்ததில்லை, இதனை நிறுவுவது தொடர்பாக கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை.” என்றும் தெரிவித்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.