தமிழகத்துக்கு எதிராக செயற்பட்டால் மத்திய அரசை எதிர்ப்போம்: ஜெயக்குமார்

மத்திய அரசு தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தால் பாராட்டுவோம். மாறாக செயற்படுமாயின் அதற்கு எதிராகவும் செயற்படுவோமென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


சென்னையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வரவு- செலவு திட்டத்துக்கு ஆதரவு கிடைப்பதைப் போன்று எதிர்ப்புகள் தெரிவிக்கப்படும், இது வழமையான ஒன்றெனவும் ஜெயக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகையால், மக்கள்  சரியானதை இனங்கண்டு அதற்கேற்றவாறு செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அந்தவகையில் நாமும் மக்களின் நலன்களை கருத்திற்கொண்டே செயற்படுவோமென ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.