கொலம்பிய கிளர்ச்சி குழுவின் தலைவர் உயிரிழப்பு!!

கொலம்பியாவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கிளர்ச்சி குழுவின் தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கடந்த 2016ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கைக்கு எதிராக போரிட்டு வந்த கிளர்ச்சி குழுவின் தலைவரே நேற்று(சனிக்கிழமை) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

FARC என்ற கிளர்ச்சி குழுவின் முக்கிய தலைவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கொலம்பிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படும் FARC என்ற கிளர்ச்சி குழுவினை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொலம்பிய பாதுகாப்பு அமைச்சர் Guillermo Botero குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக கொலம்பியாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக இதுவரையில் சுமார் இரண்டு இலட்சத்தும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.