முல்லைத்தீவில்- சுதந்திர தின நிகழ்வுகள்!!

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றன.


மேலதிக மாவட்டச் செயலாளர் கோ.தனபாலசுந்தரத்தின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

பாண்ட் வாத்திய மற்றும் இன்னியம் கலைஞர்களின் அணி வகுப்புடன் விருந்தினர்கள் மேடைக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து தேசியக்கொடியை முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபாவதி கேதீஸ்வரன் ஏற்றி வைத்தார்.

நிகழ்வில் முப்படையினர் மற்றும் அரச உத்தியோகாத்தர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

சுதந்திரதினத்தை முன்னிட்டு மரநடுகை மற்றும் குருதித்தான நிகழ்வுகள் நடைபெற்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.