எஸ்.பீ.திசாநாயக்க காட்டம்!! ஐ.தே.க- முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்!!

ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டால் நீதிமன்றத்துக்கு செல்வோமென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


தேசிய அரசாங்க பிரேரணை குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து, அதன் ஊடாக அமைச்சரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 48 ஆக அதிகரித்துக்கொள்ள ஐ.தே.க. சதித்திட்டம் தீட்டுகின்றதென எஸ்.பீ.திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐ.தே.க பண்டாடற்ற செயற்பாட்டில் ஈடுபடுமாயின் அதற்கு எதிரான நடவடிக்கைகளை நீதிமன்றத்தின் ஊடாக மேற்கொள்வோமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதிகாரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே உள்ளமையால் ஐ.தே.க.வினால் கொண்டுவரப்படவுள்ள கோரிக்கைக்கு அவர் அனுமதி வழங்கமாட்டாரென எஸ்.பீ.திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.