போக்குவரத்து பாதிப்பு!! வீதி மூடப்பட்டது!!

ஏ-9 வீதி ஊடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை- பனம்பிட்டிய பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வார்ப்பாட்டத்தின் காரணமாக ஏ-9 வீதி ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக, அங்கிருந்து கிடைத்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டு மாத காலமாக குறித்த பிரதேச பாடசாலையில் தரம் 5 வகுப்பிற்கு  ஆசிரியர் ஒருவர் இல்லாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் பெற்றோர்களும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஏ-9 வீதியில் கடும் வாகன நெரில் ஏற்பட்டுள்ளது.

தமது பாடசாலைக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை ஆர்ப்பாட்டம் தொடரும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.