மூன்று மாவீரர்களின் தாயாரான வேலு சரஸ்வதி அவர்கள் இயர்கை சாடைந்துள்ளார்!

காணாமலாக்கப்பட்ட தனது பிள்ளையை தேடி அலைந்த மற்றுமொரு தாயார் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். மாங்குளம் செல்வராணி குடியிருப்பைச்சேர்ந்த வேலு சரஸ்வதி என்பவரே மாரடைப்பால் மரணமாகியுள்ளார்.


வீரவேங்கை நகைமுகன்,லெப்.கேணல் கணபதி,வீரவேங்கை கதிர்காமர் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயாரும்; காணமலாக்கப்பட்ட தனது மகளைத்தேடியலைந்த அன்னைகளுள் ஒருவருமான வேலு சரஸ்வதியே மரணமடைந்துள்ளார்.

மனதாலும் உடலாளும் சோர்வடைந்த நிலையில் மாரடைப்பால் மரணமாகியுள்ளார் ஏற்கனவே பல தாய்மார்கள் காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளை தேடியலைந்து உயிரிழிந்திருக்கிறார்கள. இந்நிலையில் இன்று சரஸ்வதி தனது மகளை காணாமலே வலிகளோடு இவ்வுலகை விட்டு பிரிந்திருக்கிறார்.

காணாமல் ஆக்கப்பட்ட அவரது மகளும் ஒரு போராளியாவார்.புனர்வாழ்வளிக்கப்பட்டு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவரது மகள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.வீரப் பிள்ளைகளை தேசப்பணிக்கு தந்த வீர அன்னைக்கு எமது
#இறுதிவணக்கம்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.