ஜெனிவாவில் இலங்கை தொடர்பான பிரேரணையை பிரித்தானியா அதிகாரபூர்வமாக அறிவிப்பு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் இலங்கை தொடர்பான பிரேரணையை கொண்டு வரும் நடவடிக்கைக்குத் தலைமை தாங்கப் போவதாக பிரித்தானியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்த சிறப்பு அறிவிப்பை ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானிய தூதரகம் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான பிரேரணையின் மீது கவனம் செலுத்தப் போவதாகவும், சிரியா, தென்சூடான் தொடர்பான பிரேரணைகளையும் முன்வைக்கப் போவதாகவும் பிரித்தானியா கூறியுள்ளது.
பிரித்தானியாவுடன் இணைந்து, கனடா, ஜேர்மனி, மெசிடோனியா, மொன்ரெனிக்ரோ ஆகிய நாடுகள், இலங்கை தொடர்பான பிரேரணையை முன்வைக்கவுள்ளன.
“இணை நாடுகள் மீண்டும் இலங்கையுடன் இணைந்து, செயற்பட எதிர்பார்கின்றன. இந்த ஒத்துழைப்பு 2015ஆம் ஆண்டு ஆரம்பித்தது.
பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1தீர்மானத்தின் வாக்குறுதிகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த, பேரவையுடன் இணைந்து செயற்படும்.
பிரேரணை வரைவு இயல்பான நடைமுறைப்படி இருக்கும். அத்துடன், 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறுவப்பட்ட செயல்முறைகளை மேலும் விரிவுபடுத்தக் கோருவதாக அமையும்.
பேரவையின் நடைமுறைகளுக்கு அமைய முறைசாரா பேச்சுக்களை நாங்கள் ஆரம்பிப்போம்.
மீண்டும் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு பேரவையின் முழு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்றும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இது குறித்த சிறப்பு அறிவிப்பை ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானிய தூதரகம் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான பிரேரணையின் மீது கவனம் செலுத்தப் போவதாகவும், சிரியா, தென்சூடான் தொடர்பான பிரேரணைகளையும் முன்வைக்கப் போவதாகவும் பிரித்தானியா கூறியுள்ளது.
பிரித்தானியாவுடன் இணைந்து, கனடா, ஜேர்மனி, மெசிடோனியா, மொன்ரெனிக்ரோ ஆகிய நாடுகள், இலங்கை தொடர்பான பிரேரணையை முன்வைக்கவுள்ளன.
“இணை நாடுகள் மீண்டும் இலங்கையுடன் இணைந்து, செயற்பட எதிர்பார்கின்றன. இந்த ஒத்துழைப்பு 2015ஆம் ஆண்டு ஆரம்பித்தது.
பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1தீர்மானத்தின் வாக்குறுதிகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த, பேரவையுடன் இணைந்து செயற்படும்.
பிரேரணை வரைவு இயல்பான நடைமுறைப்படி இருக்கும். அத்துடன், 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறுவப்பட்ட செயல்முறைகளை மேலும் விரிவுபடுத்தக் கோருவதாக அமையும்.
பேரவையின் நடைமுறைகளுக்கு அமைய முறைசாரா பேச்சுக்களை நாங்கள் ஆரம்பிப்போம்.
மீண்டும் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு பேரவையின் முழு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்றும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை