எனது குடும்பத்திற்கும் மதுஷூக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது!

பாதாள குழுவின் தலைவன் மாகந்துரே மதுஷுக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பி​ல் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,
பாதாள குழு தலைவன் மாகந்துரே மதுஷ் மாகந்துரே பிரதேசத்தை சேர்ந்தவன் என்று தவறான கருத்துக்களே சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்படுகின்றது. மாகந்துரே மதுஷ் கம்பறுபிடிய பிரதேசத்தை சேர்ந்தவர்.
இவ் விடயத்தில் என்னையும் எனது உறுப்பினர்களையும் தொடர்புபடுத்தி அரசியல் தூற்றுதல்களே இடம்பெறுகின்றது. எனது பிள்ளைகள் பாதாள குழுவினருடன் தொர்புகொள்வதற்கான எவ்விதமான அவசியமும் கிடையாது.
இந்நிலையில், தனது மகனின் திருமண நிகழ்வில் துபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையின் பாதாளக் குழுவொன்றின் தலைவரான மாக்கந்துர மதுஷ் கலந்துக்கொண்டிருந்ததாக, பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ள கருத்துக்களை நிராகரிக்கின்றேன்.” எனவும் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.