கிராம மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் தர்க்கம்! மன்னாரில் சம்பவம்!!
மன்னார் – பள்ளிமுனை பகுதியில் வீதியில் உள்ள குழிகளை திருத்தி அமைக்கும் பணிக்கு வருகை தந்த அரச ஊழியர்களுக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான, பெருக்க மரம் அமைந்துள்ள சுற்றுலா கிராமமான பள்ளிமுனை கிராமம் காணப்படுகின்றது.
குறித்த கிராமத்திற்கான பிரதான வீதி சீரான முறையில் அமைக்கப்படவில்லை எனவும் வீதி அமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும் இன்னும் இவ் வீதி புனரமைக்கப்படவில்லை.
இது தொடர்பாக பல முறை உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் ஒழுங்கான நாடவடிக்கைகள் மேற்கொள்ளாது வெறுமனே கண் துடைப்புக்கு என பல முறை வீதிகளை தற்காலிகமாக நிரப்பிவிட்டு மட்டும் செல்கிறார்கள்.
எனவே குறித்த வீதியை முழுமையாக புனரமைக்கும் வரை வீதியை தற்காலிகமாக புனரமைக்க அனுமதிக்கப் போவதில்லை என மக்கள் தெரிவித்து இன்று (புதன்கிழமை) காலை 11 மணியளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
நிரந்தர வீதியை அமைக்கும் வரை இவ்வாறன செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கமுடியது என எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த அதிகாரி குறித்த பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறி சம்பவ இடத்தை விட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பிரதேச செயலாளர் மற்றும் பங்குதந்தை மக்களிடம் உரையாடியதை தொடர்ந்து மக்கள் குறித்த தற்காலிக பணிகளை செய்வதற்கு அனுமதி அழித்துள்ளனர்.
எதிர்வரும் 15 ஆம் திகதி குறிப்பிட்ட கிராமத்தில் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகை தர உள்ள நிலையில் குறித்த பாதைகளில் உள்ள குழிகளை மூடி பாதையை அழகுபடுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மன்னார் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான, பெருக்க மரம் அமைந்துள்ள சுற்றுலா கிராமமான பள்ளிமுனை கிராமம் காணப்படுகின்றது.
குறித்த கிராமத்திற்கான பிரதான வீதி சீரான முறையில் அமைக்கப்படவில்லை எனவும் வீதி அமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும் இன்னும் இவ் வீதி புனரமைக்கப்படவில்லை.
இது தொடர்பாக பல முறை உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் ஒழுங்கான நாடவடிக்கைகள் மேற்கொள்ளாது வெறுமனே கண் துடைப்புக்கு என பல முறை வீதிகளை தற்காலிகமாக நிரப்பிவிட்டு மட்டும் செல்கிறார்கள்.
எனவே குறித்த வீதியை முழுமையாக புனரமைக்கும் வரை வீதியை தற்காலிகமாக புனரமைக்க அனுமதிக்கப் போவதில்லை என மக்கள் தெரிவித்து இன்று (புதன்கிழமை) காலை 11 மணியளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
நிரந்தர வீதியை அமைக்கும் வரை இவ்வாறன செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கமுடியது என எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த அதிகாரி குறித்த பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறி சம்பவ இடத்தை விட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பிரதேச செயலாளர் மற்றும் பங்குதந்தை மக்களிடம் உரையாடியதை தொடர்ந்து மக்கள் குறித்த தற்காலிக பணிகளை செய்வதற்கு அனுமதி அழித்துள்ளனர்.
எதிர்வரும் 15 ஆம் திகதி குறிப்பிட்ட கிராமத்தில் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகை தர உள்ள நிலையில் குறித்த பாதைகளில் உள்ள குழிகளை மூடி பாதையை அழகுபடுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை