தொடா்கிறது மாகந்துர மதுஷின் விசாரணை தொடா்பான அதிரடிப்படையின் சுற்றிவளைப்பு!

 மாகந்துரே மதுஷின் இரண்டாவது மனைவியின் சிறியதாய் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஒரு வான் மற்றும் ஒரு ஜீப் வாகனங்கள் விசேட அதிரடி படையினரால் இன்று (புதன்கிழமை) கைப்பற்றப்பட்டுள்ளது.

சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுனுவல, கோனவில பகுதியில் உள்ள வீட்டில் இருந்த குறித்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த வாகனங்கள் போதை பொருள் வர்த்தகத்தில் இருந்து பெறப்பட்ட பணத்திலிருந்து வாங்கப்பட்டவை என சந்தேகத்திற்கிடமின்றி தெரியவந்துள்ளதாக விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துர மதுஷ் உள்ளிட்ட 31 பேர் கடந்த 4 ஆம் திகதி டுபாயில் கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னர் கடந்த நாட்களாக இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் சுற்றிவளைப்புக்களில், அவர்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் பலர் கைது செய்யப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.