அமெரிக்க படையினர் வழங்கிய பயிற்சி நிறைவு!!

இலங்கை துறைமுக அதிகாரிகளுக்கு அமெரிக்க கரையோர பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பயிற்சிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன.

ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் கொழும்பு அலுவல்கள் பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.

அதன்படி துறைமுகப் பாதுகாப்பு தொடர்பாக ஆற்றல் மேம்படுத்தல் நடவடிக்கையொன்றை, 25இற்கும் மேற்பட்ட இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பயிற்சிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன.

துறைமுகத்தின் பௌதீக பாதுகாப்பு முறைமைகள் மற்றும் பாதுகாப்பு ஆற்றல்களை பலப்படுத்த இந்த நிகழ்வு உதவியதுடன், துறைமுக பாதுகாப்பு திட்டங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் அமுலாக்கத்தை மேம்படுத்திய பயிற்சிகளையும் உள்ளடக்கியிருந்ததென தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாதம் மற்றும் ஏனைய அச்சுறுத்தல்களிலிருந்து அதிகரித்த பாதுகாப்பை வழங்குவது மட்டுமல்லாது, இலங்கையின் சுபீட்சத்துக்கும் பங்களிப்புச் செய்யும் ஏனைய நாடுகளுடனான வர்த்தகங்களை அதிகரிக்கவும் செய்யவும் இலங்கைக்கு கடல்வழி பாதுகாப்பு உதவுகின்றது.

துறைமுக பாதுகாப்பு தொடர்பாக இலங்கை வலுவான உறுதிப்பாடொன்றை வெளிப்படுத்தியாக இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு தலைமை வகித்த துறைமுக பாதுகாப்பு முன்னெடுப்புகளுக்கான இலங்கைக்கான அமெரிக்க கரையோர பாதுகாப்பு படையின் இணைப்பதிகாரி லெப்டினன்ட் மெற் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அதிகரித்த வர்த்தகங்கள் மற்றும் வர்த்தகத்துக்கான பிராந்திய மையமாக உருவாகும் இலங்கையின் இலக்கை அடைவதற்கும் அத்தியவாசியமான பாதுகாப்பு சூழலை உருவாக்குவதற்கு இந்த ஆற்றல் மேம்படுத்தல் நடவடிக்கைகள் உதவியது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.