நிபந்தனையின்றி இந்தியாவுக்கு உதவ தயார்: இஸ்ரேல் அறிவிப்பு !!

மிக முக்கிய நட்பு நாடு என்ற அடிப்படையில் தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு நிபந்தனையின்றி உதவ தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரோன் மல்கா (Dr.Ron Malka) டெல்லியில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், “காஷ்மீரில் இந்திய துணை இராணுவ படை வீரர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. வீரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா, இஸ்ரேல் மட்டுமன்றி பல்வேறு உலக நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தீவிரவாதிகளை ஒழிக்க இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றது. அந்தவகையில் இஸ்ரேலின் அதிரடி தாக்குதல் நடவடிக்கையை இந்தியாவும் பின்பற்ற வேண்டும். இந்தியா எங்கள் நெருங்கிய நட்பு நாடு. எனவே, தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு நிபந்தனையின்றி உதவ இஸ்ரேல் தயாராகவுள்ளது. எங்கள் தொழில்நுட்பத்தையும் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.