தமிழ்ப்பெயர் வைப்போம் தமிழராய் நிமிர்வோம்..!

----------------------------------------
பிரபாவெனும்
பெரும் காவியத்தை
கருவறையில் சுமந்தமிழ்!

மாறி மாறி ஆண்டவரின்
பாதம்தொட்டு வாழ்தத பரம்பரையின்
கூன் நிமிர்த்தியவரை தமிழருக்கு
தந்த தமிழ்!

தாய்க்கு நிகரான
உயிர்த்தமிழை உலகமெங்கும்
அடையாளப்படுத்தி
பட்டிதொட்டியெல்லாம்
தமிழ்ச்சொற்களால்
அலங்காரப்படுத்தி
அண்ணைத்தமிழால்
மண்ணைநேசித்த மறவர்
விடுதலைப்புலிகளை
ஈழத்திலே ஈன்ற தமிழ்!

ஆனால்?
இன்னும் எம் இனத்தின்
நிலை இழிநிலையே
அகத்தின் அழகு முகத்தில்
தெரிவதுபோல்
தமிழ்மொழியின் அழகு
குழந்தையின் பெயரில்
நிலைக்குமென்பார்!

தமிழ்மொழியில் பெயர்வைப்பதில்
தாய் தகப்பனுக்கு இன்னும் தயக்கம்!
அந்நியமொழி நாகரிகத்திலும்
ஆரியனின் சாத்திரத்திலும்
அடிமைப்பட்டு கிடக்கும் மயக்கம்!

புலம்பெயர் தமிழனுக்கு
இப்போது புதியபிரச்சனை
வெள்ளைக்காரன்
எள்ளிநகையாடுகிறான்
என்பதால் என்னவோ
கொஞ்சம் சுருக்கி வைப்பதால்
சறுக்கி வீழ்கின்றார்
அடுத்தவன் மொழியில்!

இருனூற்றி நாற்பத்தியேழு
எழுத்தில் இல்லாத
இன்பத்தமிழ் பெயரா
இருபத்தியாறு எழுத்தில்
இருக்கப்போகிறது!

தமிழ் என் உயிர்மூச்சென
மார்தட்டும் தமிழனும்
தடக்கி வீழ்ந்து தன் பிள்ளைக்கு
தமிங்கலத்தில்தானே
பெயர் சூட்டுகிறான்!

தாய்மண்ணை
மாறி மாறி ஆண்ட
ஆக்கிரமிப்பாளரின்
ஆதிக்கமொழியின்
பாதங்கழுவிய பயன்
பாதித் தமிழருக்கு
ஆதிக்கமொழியின்
பெயரே அடையாளமாய்
இருக்கிறது.

இனியாவது
விழிப்போமா?
இன்பத்தமிழெடுத்து
எம்பிள்ளைக்கு
பெயர் சூட்டுவோமா?

✍தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.