கொழும்­பில் களை­கட்­டிய -‘பூச­ணிக்­காய்’ திரு­விழா!


இலங்­கை­யின் முத­லா­வது பூச­ணிக்­காய் திரு­விழா கொழும்பு விகா­ர­மா­தேவி பூங்­கா­வில் நேற்று இடம்­பெற்­றது. அம்­பாறை, மொன­ரா­கலை மற்­றும் அநு­ரா­த­பு­ரம் மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த 25 பூசணி விவ­சா­யி­கள் இந்த பூசணி திரு­வி­ழா­வில் பங்­கேற்­ற­னர். ஐம்­பது ஆயி­ரத்­தில் இருந்து ஒரு இலட்­சம் கிலோ பூச­ணிக்­காய்­கள் வரை கொழும்­புக்கு கொண்டு வரப்­பட்­டன. மேற்­படி மாவட்­டங்­க­ளில் பூச­ணிக்­காய் அப­ரி­மி­த­மாக விளைந்­த­தால், அவற்றை விற்­பனை செய்ய முடி­யாத நிலை உரு­வாகி, விலை வீழ்ச்­சி­யும் ஏற்­பட்­டது. தமது விளைச்­சலை விற்­பனை செய்ய முடி­யாத விவ­சா­யி­கள் வீதிப் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­ட­தோடு, வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் இல­வ­ச­மாக பூச­ணிக்­காய்­களை கொடுக்­க­வும் முன்­வந்­த­னர். விவ­சா­யி­கள் இவ்­வாறு பாதிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்தே, மக்­கள் மத்­தி­யில் பூச­ணிக்­காய் பற்­றிய ஒரு விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் வகை­யி­லும் பூச­ணிக்­கா­யின் பல்­வேறு பயன்­கள் பற்றி எடுத்­துச் சொல்­ல­வும், பாதிக்­கப்­பட்ட விவ­சா­யி­க­ளுக்கு வரு­மா­னம் பெற்­றுத்­த­ர­வுமே இந்த பூச­ணித் திரு­விழா ஏற்­பாடு செய்­யப்­பட்­ட­தாக ஏற்­பாட்­டா­ள­ரான சன்ன டி. சில்வா தெரி­வித்­துள்­ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.