ஈரலக்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து,  மட்டக்களப்பு ஈரலக்குளம் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மாவட்ட அரசாங்க செயலகத்திற்கு முன்னால் இன்று (திங்கட்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

ஈரலக்குளம் பிரதேசத்தில் மக்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு கோரி, பிரதேசசபை உறுப்பினர் சி.துரைரத்தினம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மாவட்ட அரசாங்க செயலகத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள், தமது பிரதேசத்திற்கான முக்கிய பிரதான பாதையான மயிலவட்டவான் ஆற்றுக்கு பாலம் அமைக்கப்படவேண்டும், ஆசிரியர் பற்றாக்குறை, யானைகளின் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக பல கடிதங்களை அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளிடம் வழங்கியபோதிலும், இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்தநிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அங்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், ஆர்ப்பாட்டகாரர்களிடம் கலந்துரையாடியதுடன், இடம்பெறவுள்ள அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்வை பெற்றுதருவதாகவும் கூறியுள்ளார்.

எனினும், தீர்வு வழங்குப்படும்வரையில் தமது ஆர்ப்பாட்டம் தொடருமெனத் தெரிவித்த மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.