கேப்பாப்புலவில் இருந்து ஆரம்பமாகிறது காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்!!
கேப்பாபுலவு மக்கள் சொந்த நிலங்களை மீட்கக் கோரி வாகனப் பேரணி ஒன்றை இன்று (புதன்கிழமை) ஆரம்பித்துள்ளனர்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் “காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்” எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த வாகன பேரணி முன்னெடுக்கப்படுகிறது.
கேப்பாபுலவு மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்திலிருந்து ஆரம்பமான இந்த வாகனப் பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைந்ததுடன் அங்கு கவனயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து வேட்டையும் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இப்பேரணி கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்து அங்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. இதையடுத்து மன்னார், வவுனியா , நீர்கொழும்பு ஊடாக கொழும்பை சென்றடையவுள்ளது.
எதிர்வரும் 2ஆம் திகதி கொழும்பை சென்றடையும் இப்பேரணி, அங்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளது.
இதனிடையே, இந்த போராட்டத்தை பெருமளவிலான புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸார் புகைப்படங்களை எடுத்து கண்காணிக்கும் நடவடிக்கியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் “காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்” எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த வாகன பேரணி முன்னெடுக்கப்படுகிறது.
கேப்பாபுலவு மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்திலிருந்து ஆரம்பமான இந்த வாகனப் பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைந்ததுடன் அங்கு கவனயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து வேட்டையும் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இப்பேரணி கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்து அங்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. இதையடுத்து மன்னார், வவுனியா , நீர்கொழும்பு ஊடாக கொழும்பை சென்றடையவுள்ளது.
எதிர்வரும் 2ஆம் திகதி கொழும்பை சென்றடையும் இப்பேரணி, அங்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளது.
இதனிடையே, இந்த போராட்டத்தை பெருமளவிலான புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸார் புகைப்படங்களை எடுத்து கண்காணிக்கும் நடவடிக்கியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை