மன்னார் நீதவானுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

மன்னார் நீதவானுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


அதன்படி சந்தேகநபர்கள் எதிர்வரும் 14 தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று வருகைத்தந்த திருகோணமலையை சேர்ந்த இருவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து நீதவானை சந்திக்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நீதவானின் மெய்ப்பாதுகாவருடன் கலந்துரையாடிய குறித்த சந்தேகநபர்கள், நீதவானுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் உரையாடியுள்ளனர்.

இது தொடர்பாக மன்னார் நீதிமன்ற பொலிஸார் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.