எலும்புக்கூடுகளையும் தேடவேண்டிய சூழ்நிலை!

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத்தேடி போராட்டங்களை முன்னெடுத்த நாம், தற்பொழுது மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளைத் தேடவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று (வியாழக்கிழமை) மன்னாரில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காணாமலாக்கப்பட்டோரின் உறவினர் ஒருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத்தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம் தற்போது வரையில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், மன்னார் மனித புதைகுழியிலிருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 6 மனித எச்சங்கள் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதில் 5 எச்சங்களின் அறிக்கை மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறுகின்றனர். இவ்வாறிருக்க மற்றைய மனித எச்சத்திற்கு என்ன நடந்தது? ’’ என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.