இது சுதந்திர பூமியா??

குரல் வளை நெரித்து
கொல்லப்பட்ட அப்பாவி ஈழத்தமிழ்
மக்களின் கரி நாள்....

ஸ்ரீலங்கா ஒரு சுதந்திரமான நாடு என்கிறார்கள்.....
யாருக்கு சுதந்திரம் உள்ளது?


•செம்மணியில் தமிழ் பெண்களை கற்பழித்து கொலை செய்து தங்களுக்கு ஆண்மை உள்ளதாக நிரூபிக்க இலங்கை இராணுவத்திற்கு சுதந்திரம் உண்டு.

•தமிழ் இளைஞர்களை காரணமின்றி  வெள்ளைவான்களில் கைது  செய்வதற்கு  சுதந்திரம் உண்டு

•கோடிக்கணக்கான ஊழல் செய்வதற்கு மகிந்தவுக்கு  மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளுக்கும் சுதந்திரம் உண்டு.

•இராணுவத்தை ஏவி ஒரு மக்கள் கூட்டத்தை இனப்படுகொலை  செய்ய  அரசுக்கு பூரண சுதந்திரம் உண்டு.

•பொதுமக்களின் காணிகளை  ஆக்கிரமித்து அடாத்தாக குந்தியிருக்க இராணுவத்திற்கு சுததிரம் உண்டு..

•ஞானசார தேரரை  விடுதலை செய்யவும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமலும் இருக்க ஜனாதிபதிக்கு சுதந்திரம் உண்டு.

•இளைய தலைமுறையை சிதைப்பதற்காக அவர்கள் கையில் கஞ்சாவை கொடுப்பதற்கு சுதந்திரம் உண்டு.

•கலாச்சாரத்தை தொலைத்து போதை பொருட்களுடன் அலைந்து திரிய இளைஞர்களுக்கு சுதந்திரம் உண்டு

• நாகரிக மாற்றத்தால் பண்பாட்டை இழந்து திரியும்  அனைவரும் விரும்பிய படி திரிய சுதந்திரம் உண்டு.

•தாய் மொழியை பேச வெக்கப்பட்டு ஆங்கிலத்தை பேசி கௌரவத்தை காப்பாற்ற அனைவருக்கும் சுதந்திரம் உண்டு..

ஆனால்...

சொந்த நிலம் மீட்க வழியில்லா
ஏதிலிகளாய் ஈழத்தில் நாங்கள்
எங்களுக்கு சுதந்திரமில்லை..

பலர் அறியவே பலாத்காரம் பெண்களிற்கு
பெண்களுக்கு பாதுகாப்பில்லை.
இது சுதந்திர பூமியா??

காணாமல் போய்விட்ட மகனுக்காய் காத்திருந்து கதறுகிறாள் பெற்றதாய்
அந்த தாய்க்கு சுதந்திரமில்லை..
இது சுதந்திர பூமியா??

மன்னாரில் தோண்ட தோண்ட
புதைகுழியின் கரங்களாய் வரவேற்கிறது.
இது சுதந்திர பூமியா??

கொத்துக் கொத்தாக முள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்பட்டார்கள்.
இது சுதந்திர பூமியா??

இன்றைய ஈழத்தில்
செத்தழிந்து போனது மனித நேயம்
இது சுதந்திர பூமியா??

தமிழ் மக்களை செதுக்கிய
தேசப்புதல்வர்கள் கட்டி வளர்த்து
கைவிட்டு போனபின்னர்
எஞ்சிய கலாச்சாரங்களும் பண்பாடும்.,
நம் வாழ்க்கையின் பக்கத்திற்கு
முன்னுரையாய் முன்வர..,
முடிவுரை எய்தியது
நம் நெறிமுறைகள்..,
உலர்ந்த மலர்கொத்துகளாய்..!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.