ஏ.ஆர்.ரகுமான் கீபோர்டு வாசிக்க பாடி அசத்திய இளையராஜா!

இசையமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இளையராஜாவுக்கு பிரமாண்ட பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்தது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இரண்டு நாள் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்வை நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.


இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான் பேசியதாவது: இளையராஜா எனக்கு ஹெட் மாஸ்டர் மாதிரி. அவர் மீது பயம் கலந்த மரியாதை உண்டு. பொதுவாக இசையமைப்பாளர்கள் என்றால் அவர்களிடம் சில கெட்ட பழக்கவழக்கம் இருக்கும் என்பார்கள். ஆனால் இளையராஜா தனது வாழ்க்கையை ஒரு தவம் போல வாழ்கிறவர். அவரிடமிருந்து எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். பொதுவாக மேதைகள் யாரையும் பாராட்ட மாட்டார்கள், ஆனால் இளையராஜாவிடம் நான் பாரட்டை பெற்றிருக்கிறேன். எனது எல்லா இசைக்கும் அடித்தளம் இளையராஜாதான் என்று நெகிழ்ச்சிபட கூறினார்.

பின்னர் பேசிய இளையராஜா, ரகுமானை சின்ன வயதிலிருந்தே தெரியும். அவன், அவனது அப்பாவுடன் இருந்ததை விட என்னிடம் இருந்த காலம்தான் அதிகம். அந்த பாக்கியம் ஒன்றே போதுமே. என்னுடன் 500 படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறான் என்று கூறினார். பின்னர் ரகுமான் கீபோர்டு வாசிக்க, இளையராஜா பாட பார்வையாளர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர்.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.