பிரதமரிடம் போதைப்பொருள் தொடர்பான இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு!!

அமைச்சர்கள் கொக்கேய்ன் போதைப்பொருள் பயன்படுத்துவதாக கூறப்படும் விடயம் தொடர்பான இறுதி அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கையை இன்று (திங்கட்கிழமை) கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொக்கேய்ன் போதைப்பொருளை அமைச்சர்கள் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார்.

இக்கருத்து, அமைச்சர்கள் மீது களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைகின்றமையால், விசாரணை நடத்த வேண்டுமென பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தின.

ஆகையால், இவ்விடயம் தொடர்பாக உண்மையை கண்டறியும் நோக்குடன் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையிலான குழுவொன்று கடந்த வெள்ளிக்கிழமை கூடியிருந்தது.

இந்நிலையில், விசாரணைகளின் நிறைவில் இவ்விடயம் குறித்த அறிக்கையை பிரதமரிடம் கையளிக்கப்போவதாக அவர் தெரிவித்திருத்திருந்தார்.

அதன்படி குறித்த அறிக்கை இன்று பிரதமரிடம் கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.