வடக்கு மக்களும் எமக்கே ஆதரவு – கனவில் பசில்!!

ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாணத்தில் போட்டியிட்டாலும், தான் வெற்றிபெறுவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிங்கள் வாரஇதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

குறித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டால் அதனை நான் நிராகரிப்பேன்.

அதிகளவு பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகள் இருப்பதால், ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் கிடையாது.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சரியான நேரத்தில் முடிவு செய்வார்.

நான் கட்சியின் உறுப்பினர் மட்டுமே. கட்சியின் எந்தப் பதவியிலும் நான் இல்லை. ஆனால், எனக்கு மக்களின் ஆதரவு இல்லை என்பதையோ, அங்கீகாரம் இல்லை என்பதையோ நான் நிராகரிக்கிறேன்.

நான் வடக்கிலிருந்து போட்டியிட்டால், எமது பக்கத்தில் வேறெந்த வேட்பாளரையும் விட அதிக வாக்குகளைப் பெற முடியும்” என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.