ரயில் பாதைக்கு புதிய கடவை திறந்துவைப்பு!!

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் உள்ள ரயில் பாதைக்கு பாதுகாப்பு கடவை அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பாதை இன்று (திங்கட்கிழமை) உத்தியோகப்பூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஈஷி மிஷன் ஆலயத்தின் அனுசரணையில் பிரதான பிஷப் பி.எம்.இராஜசிங்கத்தினால் இந்த கடவை அமைக்கப்ட்டுள்ளது.

இந்த ரயில் கடவை, பொலிஸ் நிலையங்களின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிட்யூ.ஜ.ஆர்.பொன்சேகாவினால் உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இதன்போது ரயில் கடவையில் உயிரிழந்த 4பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு,  மங்கள விளக்கேற்றப்பட்டது .

இந்நிகழ்வில், ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ்த சில்வா, தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் திருமதி கோகிலகுமார் அஞ்சலி, ஆலய நிர்வாக உறுப்பினர்கள், கிராம அலுவலகர்கள், கிராம அமைப்புக்கள், மாதர் அமைப்புக்கள், கிராம மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியிலுள்ள ரயில் பாதையில், கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி சம்பவித்த விபத்தில், கார் ஒன்றில் பயணித்த 8பேரில் 4பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.