சோமாலியாவில் கார் குண்டு வெடிப்பு!!

சோமாலிய தலைநகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வீதியில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் குறைந்தபட்சம் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.


சோமாலிய தலைநகரில் நேற்று இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோமாலியா நாட்டில் ஆளும் அரசை நீக்கி விட்டு இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி செய்ய அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு முயற்சி செய்து வருகிறது. அல்- கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இந்த குழுவானது பல வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தலைநகரின் மக்கா அல் முக்காரமா சாலையில் நேற்று வந்த கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் .

அத்துடன் அங்கிருந்த கட்டடங்கள் மற்றும் 12க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.