ஷமீமா சிரிய முகாமிலிருந்து இடமாற்றம்!!

ஷமீமா பேகம் மற்றும் அவரது குழந்தையின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சிரிய அகதி முகாமிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


19 வயதான ஷமீமா பேகமும் அவரது குழந்தையும் சிரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அல் ஹோல் முகாமில் இருந்து வேறு ஒரு இடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவில் இணைவதற்காக 2016 ஆம் ஆண்டில் சிரியாவுக்கு சென்ற கிழக்கு லண்டனைச் சேர்ந்த ஷமீமா பேகம் மீண்டும் லண்டன் திரும்புவதற்கான கோரிக்கையை கடந்தமாதம் முன்வைத்தார்.

தனது குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு மீண்டும் பிரித்தானியாவுக்கு வருவதற்கு ஷமீமா விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அவரது குடியுரிமை நீக்கப்படுவதாக உள்துறை அமைச்சு அறிவித்தது.

தனது நிலைமை குறித்து ஊடகங்களுக்கு ஷமீமா பேகம் தெரிவித்ததையடுத்து அவருக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ஈராக்கிய எல்லைக்கு அருகில் உள்ள மற்றொரு முகாமுக்கு ஷமீமா பேகமும் அவரது குழந்தையும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.