இந்தியாவை தாக்கும் தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் பதிலடி கொடுப்போம்: மோடி!!

இந்தியா மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமென பிரதமர் மோடி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய போது பிரதமர் மோடி இதனைக் கூறியுள்ளார்.

இதுகுறித்து தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த பிரதமர், “ரபேல் விமானத்தை உரிய காலத்தில் கொள்வனவு செய்யப்பட்டால் கடந்த 27ஆம் திகதி பாகிஸ்தான் விமானங்கள் எல்லைதாண்டி வந்தபோது வேறுவிதமான முடிவை சந்தித்திருக்கும்.

ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கின்றார்கள். தீவிரவாதம் என்ற நோயின் வேர் அண்டை நாட்டில் பரவியிருக்கின்றது. நாம் அந்த நோயை அதன் வேரில் இருந்து குணப்படுத்த வேண்டாமா? ஏன் அதன் வழிகாட்டிகள் இந்தியாவிலோ அல்லது நாட்டுக்கு வெளியிலோ இருந்து இந்தியாவை அழிக்க நினைத்தால், இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது.

இந்தியா மீது தாக்குதல் நடத்திய தீவீரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் கொல்லப்படுவார்கள். அரசு மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் பாகிஸ்தான் ஊடகங்களில் தலைப்புச் செய்திகள் ஆகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.